Saturday, March 26, 2011

மறுபிறவி எடுத்து உன்ன எப்டியாச்சும் காதலிக்கணும் ஆனா அப்போவாச்சும் கைப்பிடிக்கணும்!!



தனியாய்ப் புலம்புகிறேன் அன்பே துணையாய் உடனே வா. வெண்ணிலவை தூது அனுப்புகிறேன் அது உன் அழகில் மயங்கி அங்கேயே அமர்ந்துவிடும் அதையும் கொஞ்சம் கூட்டி வா. என் உயிருக்கு உறவானவளே இன்றெப்படி உன்னால் புரியாத புதிராக முடிந்தது?

பிரிவுகளும் துரோகங்களும் என்கொன்றும் புதியவை இல்லை. அதனால் உன் பிரிவு என்னை பாதிக்கவில்லை என சொல்ல வரவில்லை என் ஒவ்வொரு நிமிடங்களையும் நீ சந்தோஷமான தருணங்களாக மாற்றுகிறாய் என சொன்னதால் தான் ஏனோ என் ஒவ்வொரு நொடியும் நோய்வாய்ப்பட வைத்து முடமாக்கி விட்டாய்

சின்ன சின்ன சண்டைகள் செல்லமான கோபங்கள் காதலுக்கு அவசியம் என நினைதேன். அது தேவதைகளின் காதலில் சாத்தியமற்ற ஒன்றோ? நீ தந்த நோட்டு புத்தகமும் உன்னிடமிருந்து திருடிய பேனாவும் மட்டுமே இன்று நீயில்லாத இந்த தனிமையை வெகு விமரிசையாக முத்தமிட்டு முத்தமிட்டு கொண்டாடுகின்றன. அவை முத்தமிட்ட இடமெல்லாம் உன் முகமும் பெயரும் தான். பாவம் அவைகளுக்கும் என்னைப்போல் உன்னைத்தவிர வேறொன்றும் அறியாதவை போலும்..




கொஞ்சம் வந்து கொஞ்சி விட்டுப்போவேன்.அதன் ஈரம் காயும் வரையாவது சந்தோசமாயிருகிரேன். உன்னுடனான என் காதல் என்னை மனிதனாக்கியது. இன்று உன் பிரிவு என்னைக் கவிஞன் ஆக்கியது. தயவு செய்து என்னுடன் வந்து கலந்து விடு. மனிதனையும் கவிஞ்சனையும் விட உன் காதலனாய் இருப்பதுவே பிடித்திருக்கிறது. எத்தனை எத்தனை கவிதைகளை எழுதினாலும் அதற்கு தனிமை என்ற தலைப்பே தவறின்றி பொருந்துகிறது. உன் மனம் இன்று மட்டும் குரங்காய் மாறக் கூடாதா? அது என்னுடன் சேர் என்று துடிக்க கூடாதா?

நேற்றிரவு சற்று பின்னிரவில் வெண்ணிலவை காணவில்லை வானெங்கும் தேடிப்பார்த்தேன் காணவில்லை. கடைசியில் அது எங்கிருந்தது தெரியுமா? அடிக்கடி நானும் நீயும் சந்திக்கும் தென்னை மரத்தோப்பில் கவலையாய் இருந்தது. ஹும்ம் என்னவென்று சொல்ல அந்தக்கதையை.. உனக்காய் தன்னை ஏற்கட்டுமாம் என்று அழுது புலம்பி கண்ணீர்க் கதை வடித்தது. பேதை நிலவுக்கு உண்மையாகவே தெரியாதா உன் வட்டப்பொட்டின் வடிவு கூட அதற்கு இல்லையென்று!!



நன் இருவரின் தனிமை இனிமையாகத்தான் இருந்தது அருகில் நீயிருந்து என் கண்ணீர் துடைக்கும் வரை!! இன்று மனதில் அணுவளவும் பலமில்லை அனால் அனுவாயுதமாய் உன் நினைவுகள் கொடுமை செய்கின்றன. அளவிட முடியாத இந்த சோகங்களை எங்கு நான் சொல்லி அழ கண்மணியே ? உன் விரலோரம் ஒரு இடம் தந்து விடு உன் மோதிரமாய் என் நாட்களிபேன். ஒரு முறை சொல் எனக்கு, தேன் இல்லாத பூக்களை கூட கண்டிருப்பாய் அனால் நீ இல்லாத என்னை கண்டதுண்டா ?


இந்த மடல் இறுதி மடலோ தெரியவில்லை, ஆனால் இதற்குமேல் நிரப்ப கண்ணீரும் இல்லை, வார்த்தைகளை செதுக்க கைகளில் பலமும் இல்லை!! நீதந்த உடல் மட்டும் மீதமாய் உன் நினைவுகளுடன் துடித்து கொண்டிருக்கிறது முடிந்தால் அதையும் வந்து எடுத்து விடு சீக்கரம். திரும்பவும் பிறந்து வளர்ந்து உன்ன எப்டியாச்சும் காதலிக்கணும். ஆனா அப்போவாச்சும் கைப்பிடிகனும்!!



Wednesday, March 9, 2011

கொஞ்சமாவது கொஞ்சிப்போவேன்


நிறைய நிறைய ஆசையிருக்கு நிறைவேற்ற நாளுமிருக்கு

நீ மட்டும் அருகிருந்தால் நான் உசர போவேன் (புள்ள)


எனக்கு கஷ்டம் வரும் போது, துன்பம் கொஞ்சம் அரும்பும் போது

உன்ன மட்டும் நெனச்சுக்குவேன் உள்ளுக்குள்ள குளிந்துடுவேன்


ஊர் கூடி எனக்கெதிரா பொல்லாப்பு சொல்லும் போதும்

நீ சொல்லும் ஒத்த வார்த்தை என் உசிர தொட்டு பார்க்கும்.


சாகும் நொடி நெருங்கும் போதும் எமனே எதிர வரும் போதும்

உன்ன கொஞ்சம் பார்த்திருந்தா அவனக் கூட எதிர்திடுவேன்


நீ சொல்லும் வார்த்தை எல்லாம் உரமாக மாறிடுதே

விதைக்குள் இருந்து விருட்சமாக நாளை நானும் எழுந்திடுவேன்


ஓட்டக் குடிசையிலே நீ வச்ச மீன் கொழம்பு தேனாக இனிக்கயிலே

மோட்சத்த நான் பாத்தேன், மனசுக்குள்ள பூ பூத்தேன்


பத்திருக்கும் என் வயசு உனக்கப்போ எட்டிருக்கும்

விளையாட்டு தாலி கட்டி விதிய நானும் நிர்ணயிச்சேன்


நிக்காம ஓடுற நம்மூறு ஆத்துல வத்தாத தண்ணிபோல

உன் நினைப்பு எனக்கு புள்ள. கொஞ்சமாவது கொஞ்சிப்போவேன்


உனப்பிரிஞ்சு வருஷம் நாலோடிப் போனாலும் நம் காதல்

நினைவுகள் கழுத்துல கயிறாக இருக்குதடி கொஞ்சமாவது கொஞ்சிப்போவேன்


- jj jr


Friday, July 30, 2010

தேவதையே


எத்தனை மொழிகளை கற்றுவிட்டேன்
ஆனால் இன்னும் எழுதவில்லை- உன்
முகச்சுழிப்பிற்கு இணையான கவிதையை

என்னை நீ எந்தளவு விரும்புகின்றாய்
என்று எனக்கு தெரியாது- ஆனால்
என் அன்பின் அறிய அந்த
வானத்து நட்சத்திரங்களை எண்ணிப்பார்.

இதற்கு மேல் சொல்லமாட்டேன் இரவில்
வெளியே வராதே என்று. இப்போது பார்
அந்த வெண்ணிலவே மேகத்தின் நடுவில்
வெட்கப்பட்டு ஒளித்திருப்பதை

உன்னோடு இருக்கும் என்
பொழுகள் இப்போது மகிழ்ச்சியை
மட்டுமே அள்ளித் தருகின்றது.

உன்னை நினைத்து இரவின்
நீளங்கள் நீண்டு கொண்டே செல்கிறது

ஒவ்வொரு கணங்களையும் உனக்காக
மட்டும் வாழத்தோன்றுகிறது

என்காக நீ இருக்கிறாய் என
நினைக்கும் போது வாழ்க்கையை
வாழத்தோன்றுகிறது

நான் உனக்கு தரும் முத்தங்களில்
உள்ள அன்பை சொல்லி புரியவைப்பதெப்படி

அர்த்தம் இல்லாத எனக்கும் அன்போடு
காதலையும் தந்தாய்


-ஜெனோஷன்


Sunday, May 30, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா



''விண்ணைத்தாண்டி வருவாயா '' வந்துவிடு
உன்னை கண்டவுடன் புதிதாய் ஒரு மாற்றம்
முடிந்து போனது என நினைத்த ஒரு
கவிதை முற்றுப்புள்ளி வைக்கப்படாமல்
இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்

பல ஆண்களின் கவிதைத்தொகுதிகள்
உனக்கு சொந்தமானதாக இருக்கலாம்
ஆனால் என் இதயத்தில் வேலாய்
பாய்ந்த உன் கூரான
விழிகள் ஏற்படுத்திய காயங்களும்
உனக்குத்தான் சொந்தம்

பல வருடங்களாக உன்னை பார்த்து
அவஸ்தைப்பட்டு எழுதிய கவிதைகளைவிட
பல நாள் கழித்து உன்னை பார்த்த
அந்த நொடி இனிமையாய் இருக்கிறது

என் வாழ்வில் நீ
வைரமுத்துவின் முழு நீள காதல் காவியம்
பல நாள் கழித்து அம்மாவின் அன்பு
முத்தம்
நான் தேடித்திரிந்த தேவதை
பல லட்சம் வண்ணத்துப்பூச்சிகளின் சங்கம்

இசைஞானியின் இடைக்கால கீதம்
மழை நாள் இரவில் நெடுந்துார ஜன்னல்
பயணம்
உண்மை நண்பனின் பிறந்தநாள் பரிசு
தனியே நெடுஞ்சாலையில் முணுமுணுக்கும்
காதல் பாடல்

ஏ.ஆர் ரகுமானின் தமிழ்ப்பாடல்
உண்மை காதலர்கள் பல நாள் பிரிவின்
பின் சந்தித்த நொடிப்பொழுது
ரோஜா செடியின் முட்களை மறைத்து
வாசத்தை காட்டிய என்னவளே

மொத்தத்தில் நீ கௌதம் வாசுதேவ்
மேனன் இயக்கிய'' மின்னலே' ' ''பச்சைக்கிளி
முத்துச்சரமாய்'' இருக்க ''வாரணம் ஆயிரம்'' புடைசூழ ''விண்ணைத்தாண்டி வருவாயா'

--ஜெனோஷன்

Monday, May 3, 2010

நானும் கவிதைகளும்


காற்றில் காற்றாடியாய் இருந்த என்னையும்
காற்றில் கரைந்திருக்கும் வார்த்தைகளை
கோர்த்து கவிதை
ழுத தூண்டியது
இக் கவிதைகள் தான்.

என்னை சீர்செய்தவர்கள் பலர்!
வைரமுத்துவின் சிற்பியே உன்னை செதுக்குகிறேன்
உண்மையாகவே செதுக்கியது என்னை..
உண்மையாகவும் உளியாகவும் அவரின் ஒவ்வொரு
வைர வரிகளும் வரமாய் அமைந்தன எனக்கு.

இப்போதெல்லாம் மனம் கவிதைகளில் மூழ்க
முனைகிறது.கவிதைகளில் என்னை
தொலைக்கும் ஒவ்வொரு நொடியையும்
மனம் ஆவலாய் ஏதிர்பார்க்குறது.

என் வாழ்வில் பல சுமைகள்.அவை
ஒவ்வொன்றையும் கவிதைகளின் முற்றுப்புள்ளியில்
இறக்கி வைக்கின்றேன்.சுமைகளை
சுகமாக மாற்றும் இக் கவிதைகளும் என் உயிர் தான்

வேகமாக ஓடும் கால வெள்ளத்தில்
இந்த கவிதைகள் மட்டும் இல்லையெனின்
என்றோ காற்றில் கரைந்திருக்கும்
என் உயிர்

வாழ்வின் முடிவில் கடலின் தொடக்கத்தில்
நிற்கும் ஒவ்வொருவரும் கவிதைகளால்
செதுக்கப்படுவர். ஒவ்வொரு முடிவும் புது
தொடக்கம் என உணர்வர்.

ஆயிரம் நூல்களுக்கு சமம் அடிபட்டவனின்
அனுபவங்கள். எனவே இது அல்லல்பட்டு
அமைதியனவனின் புலம்பல்கள். சோதனைகள்
மனிதனை மேன்மேலும் மனிதனாக்குகிறது.

ஆரவாரமின்றி கவிதை படியுங்கள்
அது உங்களை சரியான திசையில் அமைதியான
கடலில் பயணிக்க வைக்கும் வாழ்வை
மாற்றும் நாளை மனிதனாகும் உங்களை

-ஜெனோஷ் ஜெயம்